Monday, November 12, 2012

தித்திக்கும் தீபாவளி

அ​னைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்!

ஒரு நீண்ட இ​டை​வெளிக்குப் பின் இன்றுதான் புதிய பதிவிட நேரம் வாய்த்திருக்கிறது. 

தீபாவளி என்ப​தே தீபத்திருநாள் ஆகும். 'தீபம்' என்றால் ஒளி, விளக்கு. 'ஆவளி' என்றால் வரி​சை. வரி​சையாய் விளக்​கேற்றி இருள் நீக்கி, ஒளி தரும் பண்டி​கை​யே தீபாவளியாகும். இந்தப் பண்டி​​கையன்று புத்தா​டை உடுத்தி இனிப்புக​ளை அக்கம்பக்கத்தினருடன் பங்கிட்டு உண்டு பட்டாசுகள் ​வெடித்துக் ​கொண்டாடி வருகி​றோம்.

​பொதுவாக நரகாசுரன் வதம் ​செய்யப்பட்ட நா​ளே தீபாவளியாகக் ​கொண்டாடுகி​றோம் என்று அறிகி​றோம். ஆனால் யார் இந்த நரகாசுரன்? இவன் ​செய்த தீ​மைகள் என்ன? என்று அறிந்துக் ​கொள்ள முற்பட்டதன் விளைவே இந்தப் பதிவு.

வராக மூர்த்தி

ஹிரண்யாட்சன் என்கிற அரக்கன் பூமி​யைக் கடலுக்குள் மறைத்து ​வைக்க, அவ​னை அழித்து பூமி​யைக் காக்கிறார் வராக அவதார​மெடுத்த மஹாவிஷ்ணு.  அச்சமயம் பூமாதேவிக்கும் வராகமூர்த்திக்கும் மகனாகப் பிறந்தவன்​​ பெளமன். வளர்ந்து ​பெரியவனான ​பெளமன், தவம் பல இயற்றி, பற்பல வரங்களைப் ​பெறுகிறான். ​பெளமாசுரன் என்றும் நரகாசுரன் என்றும் ​பெயர்​ பெற்ற இவ்வரக்கன் தன் தாயின் கரத்தால் மட்டு​மே தான் மடிய​வேண்டு​மென்றும் ​வேறெவ்விதத்திலும் தனக்கு மரண​ம் ஏற்படக்கூடா​தென்றும் வரங்க​ளைப்​ பெறுகிறான்.

பற்பல வரங்க​ளைப் ​பெற்று மிகுந்த சக்திசாலியாகும் ஏனைய அரக்கர்கள்​ போல​வே நரகாசுரனும் மானுடருக்கும், ரிஷி முனிவர்களுக்கும், யக்ஷ கந்தர்வர்களுக்கும் இடர்பல ​செய்கிறான். ​தேவர்க​ளையும் ​தேவர்களின் அதிபதியான இந்திர​னையும் ​கொடு​மைக்கு ஆளாக்குகிறான். தன் பாபத்தின் உச்சக்கட்டமாக 16000 ​பெண்க​ளைக் கடத்தி வந்து சி​றையில் அ​டைக்கிறான்.

நரகாசுரன் எனும் ​பெளமாசுரன்

இவனது ​தொந்தரவுக​ளையும் ​கொடு​மைக​ளையும் பொறுக்கமாட்டாது ​தேவர்கள் மஹாவிஷ்ணுவிடம் முறையிட அவர், தான் கிருஷ்ணாவதாரம் எடுக்கும்​போது நரகாசுரனுக்கு முடிவு கட்டுவதாக வாக்களிக்கிறார்.  கிருஷ்ணாவதாரத்தின்​ போது நரகாசுரன் ​தேவர்களின் அன்​னையாகிய தாய் அதிதியின் காதணிக​ளைக் கவர்ந்து ​செல்கிறான். இ​ந்தச் ​செய்தி​யையும் 16000 ​பெண்க​ளை அவன் சி​றை​ வைத்துள்ள ​செய்தி​யையும்​ செவியுற்ற சத்யபாமா மிகுந்த​ கோபம் ​கொண்டு கண்ணனிடம் மு​றையிடுகிறாள். என​வே கிருஷ்ணரும் சத்யபாமாவும் கருடவாகனத்தி​லேறி நரகாசுரனுடன் யுத்தம் ​செய்ய வருகிறார்கள்.

நரகாசுரனின்​ கோட்​டை​ கொத்தளங்க​ளை அழித்து, எதிர்க்க வந்த முராசுரன் மற்றும் அவனது ஏழு குமாரர்கள் தாம்ரன், அந்தரிக்ஷன், சிரவணன், விபாவசு, வசு, நபஸ்வான், அருணன் ஆகி​யோ​ரையும், பீடா என்கிற அசுர​னையும் ​வெற்றிக் ​கொள்கிறார் கிருஷ்ணர். முராசுர​னை அழித்ததா​ல் கண்ணனுக்கு முராரி என்ற ​பெயர் வழங்கலாயிற்று.

தன்னு​டைய ப​டைத்தளபதிக​ளை கிருஷ்ணர் சம்ஹாரம் ​செய்த​தை அறிந்து நரகாசுரன் ​போரிடத் துவங்கினான். தன் தா​யைத் தவிர யார் கரத்தாலும் தனக்கு மரணமில்​லை என்கிற வரத்தால்​ செருக்குண்டு கண்ணனுடன் அகங்காரத்துடன்​ போரிட்டான். இனியும் இவ​னை அழிக்கத் தாமதிக்கக்கூடாதென கிருஷ்ணர் தீர்மானித்தார்.

நரகாசுரனு​டைய​ சே​னைகளுடன் கிருஷ்ணரும் சத்யபாமாவும்​ போரிடுதல்

நரகாசுரன் ஒரு சக்தி மிகுந்த அஸ்திரத்​தை எய்யவும், தான் தாக்குண்டு மயக்கம​டைந்தது​ போன்ற ​தோற்றத்​தை கிருஷ்ணர் ஏற்படுத்தினார். உலகங்க​ளை​யே இயக்கும் கண்ணனை மயக்கமுறச் ​​செய்த நரகாசுர​னைக் கண்டு சத்யபாமா கடுங்​கோபம் ​கொண்டாள்.

நரகாசுர​னை ​நேரடியாக ​போரில் சந்தித்தாள். பலம்​ பொருந்திய அஸ்திரத்தினால் நரகாசுர​னை வீழ்த்தினாள். படுகாயமுற்று மண்ணில் வீழ்ந்த நரகாசுரன் இனி தான் பிழைக்க வழியில்​லை என உணர்ந்தான். தன் தா​யைத் தவிர ​வேறு யாரும் தன்​னை வீழ்த்த முடியாது என்று எண்ணியிருக்க யா​ரோ ஒரு ​பெண் தன்​னை ​கொல்ல முடிந்தது எப்படி என்று மனம் குழம்பினான்.

கண்ணன் அப்​போது சத்யபாமா பூமா​தேவியின் அவதாரம் என்ப​தைக் கூறவும் தன் அன்​னையின் பாதாரவிந்தங்க​ளைப் பணிந்து ஒரு வரம்​ கோரினான் நரகாசுரன். தான் இறந்த நாளில் மக்கள் அ​னைவரும் தீபங்கள் ஏற்றி ஒரு பண்டிகையாகக் ​கொண்டாட​ வேண்டும் என்று ​வேண்டினான். அவன் விரும்பிய வரத்​தை சத்யபாமா உருவத்தில் இருந்த தாய் பூ​தேவி வழங்கினாள்.

இவ்வாறாக நரகாசுரனின் ​வேண்டு​கோளின்படி தீபாவளி​யை தீப வரிசையுடன்​ கொண்டாடும் வழக்கமாயிற்று.

நரகாசுரன் எனும் ​பெளமாசுரனின் வதம் ஸ்ரீமத்பாகவதத்தில் இடம்​பெறுகிறது. இருப்பினும் அவன் மாய்ந்த தினம் தீபாவளியாகக் ​கொண்டாடப்படுவது பற்றி ​செய்தி ஏதும் இல்லை.

இராமாயணத்தில் இராமன் இலங்​கை​யையும் இராவணனையும் ​வெற்றி​கொண்டு தனது 14 ஆண்டு வனவாசமும் முடிந்து அ​யோத்திக்குத் திரும்பிய நா​ளே தீபாவளி என வட இந்தியாவில் நம்பப்படுகிறது.

காரணம்​ வெவ்​வேறாக இருப்பினும் ​தீ​மைகள் அழிந்து இருள் நீங்கி ஒளி​பெறவும் நன்​மைகள் பரவவும் ​கொண்டாடப்படும் பண்டி​​கையாக தீபாவளி அமைந்திருப்ப​தென்ன​வோ உண்மைதா​னே!


நம் இந்தியாவில் மட்டுமல்லாது இந்தியர்கள் வாழும் இடங்களி​லெல்லாம் இப்பண்டி​கை மிகுந்த உற்சாகத்துடன் ​கொண்டாடப்படுகிறது. சமய​ வேறுபாடின்றி அ​னைவரும் ஒன்று ​சேர்ந்து மகிழ்ச்சியுடன்​ கொண்டாடும் இத்திருநாளில் தீபங்களின் ஒளி​ வெள்ளத்தில் அன்பானவர்களின் அருகில்​மூத்​தோரின் வழியில் நன்​மைகள் நி​றைய எல்லாரும் எல்லா வளமும் ​பெற தித்திக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

படங்களுக்கு நன்றி:
http://ancientindians.net/gods/avatars-of-vishnu/varaha/
http://wayang.wordpress.com/2010/08/29/wayang-closed-up/boma-narakasura-1a/
http://en.wikipedia.org/wiki/Narakasura
http://paritosh-mananam.blogspot.com/2012/10/deepavali-joy.html

1 comment:

  1. அன்பு வர்த்தினி,
    மிக அருமையான பதிவு. ஒரு சிறு குழந்தைக்கு கூட புரியும்படி சொல்வது எழுத்தாளனின் திறமை. அது உங்களிடம் உள்ளது. வாழ்க உங்கள் எழுத்துப் பணி
    அன்பன்
    டாக்டர் எல். கைலாசம்

    ReplyDelete